Posts

Showing posts from November, 2018

குருத்துவத்தை சிநேகிப்போம்

குருத்துவத்தை சிநேகிப்போம் குருக்கள் நம்மை ஆசீர்வதிக்கவும்,தனிப்பட்ட விதமாய் உரையாடவும் விரும்பும் நாம்,அவருடன் உரையாடவும்,நலம் விசாரிக்கவும் முயல்வோமே... தலை வணங்கி சிலுவை அடையாளம் கேட்கும் நாம்,அவரின் பணிச்சுமையை தாங்கவும் முன்வருவோமே..... நம் இல்லம் வரவில்லை என கருதும் நாம்,குடும்பத்தோடு அவரை சந்திக்க நினைப்போமே..... நாம் விதவிதமாய் உண்ணும்பொழுது, அவரை நினைத்து அவரோடு உணவை பகிர்வோமே.... நாம் மட்டுமே வருத்தமும்,கவலையும் கொள்வதாக கருதாமல் அவர்கள் மனக்குறைகளுக்காகவும் செபிப்போமே.... நாம் ஒரு சுற்றுலா செல்கையில்,நம் தந்தையையும் நம்முடன் வர அழைப்போமே.... நமக்கு மட்டுமே குறைகளுண்டு அங்கலாய்க்காமல்,குறை காணும் நோக்கின்றி அவர்தம் நிறை கண்டு மனமகிழ்வோமே.... நமக்காக உழைக்க வந்த ஆன்மகுருவுக்காக சற்று உழைப்போமே... நமக்காக செபிக்க வந்த அருட்தந்தைக்காக மன்றாடுவோமே...

குழந்தைகள் தினம் !

இன்று குழந்தைகள் தினம் ! சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்! 'பேசி முட்டாள் ஆவதை விட பேசாமல் இருப்பதே புத்திசாலித்தனம்."ஜவஹர்லால் நேரு . சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார். இவர் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாள் இந்திய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1945) ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார். இவர் சிறந்த ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதிய ஆங்கில நூல்கள் 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா", 'க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி" மற்றும் 'டுவார்ட்ஸ் ப்ரீடம்" ஆகியவை ஆகும். இவர் எழுதிய தமிழ் நூல்கள் உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு போன்றவை ஆகும். நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டுமுதல் மே 27,

எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்

நீங்கள் குழுவாழ்வில் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவர் அறிவுறுத்தும் பண்புகள் மூன்று: அ. சக குழு உறுப்பினர்களுக்கு இடறலாக இல்லாமல் இருத்தல் ஆ. சக குழு உறுப்பினர்கள் மனம் வருந்தினால் மன்னித்தல் இ. இறைவன்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருத்தல் ' 'பாவ சோதனை வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், யாரால் வருகிறதோ அவருக்குக் கேடு' என எச்சரிக்கிறார் இயேசு. ஆக, பாவம் செய்ய நான் மற்றவரைத் தூண்டும்போது அவர் பெறும் தண்டனையைவிட நான் பெறும் தண்டனை அதிகமாக இருக்கிறது. எந்தப் பாவம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், கோபம், பொறாமை, ஒப்பீடு போன்ற குழு உறவுப்பிறழ்வு பாவங்களாகவும் இருக்கலாம். அடுத்ததாக, 'மன்னிப்பு.' ஒரு குழுவில் மற்றவர் பாவம் செய்து, அதை அவர் உணர்ந்து, மீண்டும் மீண்டும் திரும்பி வரும்போது, அவரை மன்னிப்பது இவரின் கடமையாக இருக்கிறது. மேலும், 'நம்பிக்கை.' இறைவன்மேல் கொண்டிருக்கிற நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் மற்ற இரண்டு பண்புகளின் அடித்தளமாக இருக்கிறது. எவை இருக்கக் கூடாது? 1. குறைச்சொல்லுக்கு ஆளாகமல் இருத்தல் 2. அகந்தை 3. முன் கோபம் 4. குடி

பாத அழுத்த சிகிச்சை

உடலில் உள்ள அனைத்து விதமான நோய் களும் குணமாக்க முடியும். நம்முடைய கால்களை நாம் அமுக்கி விடுவதன் மூலம் எல்லா நாள் பட்ட நோய்களையும் குணமாக்க முடியும். மேலும் இவற்றை தெரிந்தது கொள்ள கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும். https://youtu.be/B5T7kAnUFUI

வீடுகளில் சபைகள் நடைபெற்றால்  அதனை விசாரணை நடத்த யாரும் சபைகளுக்குள் நுழைய கூடாது

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் 3039 /2018 நாள் 9-3-2018 தீர்ப்பின் படி வீடுகளில் சபைகள் நடைபெற்றால்  அதனை விசாரணை நடத்த யாரும் சபைகளுக்குள் நுழைய கூடாது எனவும் மேலும் சபைகள் நடத்த எந்தவித முன் அனுமதி பெற தேவையில்லை என தீர்ப்பு வழங்க பட்டுள்ளது கர்த்தர் தாமே எல்லா வற்றையும் செய்து முடிப்பார்.

IMO (Instant Money Order)

ATM , Bank இல்லாத நிலையில் எப்படி நாம் அவசரமா பணம் அனுப்ப முடியும். ஒரு பெரிய தபால் நிலையம் செல்லுங்கள், அங்கே IMO (Instant Money Order) அனுப்பவேண்டும் என்று சொல்லுங்கள். விண்ணப்பத்தில், பெறுநர், அனுப்புநர் விபரம் மற்றும் அனுப்பவிரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், உங்களுக்கு ஒரு சீல் செய்யப்பட்ட கவர் தரப்படும். வெளியே வந்து அந்த கவரை பிரித்தால் உள்ளே ஒரு 16 இலக்க எண் இருக்கும், அந்த நம்பரை உங்கள் கணவர் அல்லது மனைவிக்கு SMS  செய்யுங்கள், அந்த எண் என்ன என்று அந்த கவரை உங்களுக்கு கொடுத்த தபால்நிலைய ஊழியருக்கு கூட தெரியாது. உங்கள் கணவர் அல்லது மனைவி தாங்கள் இருக்கும் ஊரில் உள்ள  தபால் நிலையத்துக்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த 16 இலக்க எண்ணை எழுதி கொடுத்தால் உடனே பணம் கொடுக்கப்படும். ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம்.       இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1500 கிளைகளில் இந்த சேவைகிடைக்கும்.       

சுகாதாரம் எப்படி பேண வேண்டும் என்று இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளலாம்

https://youtu.be/npjcrrJVxD8

தமிழன் தமிழ் மருத்துவம்

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்     தமிழ் மருத்துவ அறிவுரைப்பா மூளைக்கு வல்லாரை   முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை    எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்   பசிக்குசீ  ரகமிஞ்சி கல்லீரலுக்கு  கரிசாலை   காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை   காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம்   தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்   நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு  முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்   மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு  மருதம்பட்டை   அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு  எள்ளெண்ணை   உணர்ச்சிக்கு  நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு    கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை   களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம்   குரலுக்கு  தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தாமரை   வெள்ளைக்கு கற்றாழை சிந்தைக்கு  தாமரைப்பூ   சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை கக்குவானுக்கு வசம்புத்தூள்   காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          

பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.

சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது. பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும். பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக  கருதப்படுகிறது. இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது. நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை

சிந்தித்துப் பார்த்தல்

சிந்தித்துப் பார்த்தல் இயேசு சீடத்துவத்தைப் பற்றிப் போதிக்கின்றார். 'தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது' என்று சொல்கின்ற இயேசு, 'கோபுரம் கட்டும் ஒருவர்' மற்றும் 'போருக்குச் செல்லும் அரசர்' என்று இரண்டு எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கிறார். இவர்கள் வழியாக இயேசு சீடத்துவத்திற்காகச் சொல்லும் பாடங்கள் மூன்று: அ. நிறைய சிந்தித்து முடிவெடுத்தல் சிந்தித்து முடிவெடுத்தல் என்பது கொஞ்ச நேரம் கோயிலில் உட்கார்ந்து தியானித்து முடிவு செய்தல் அல்ல. மாறாக, எல்லாவற்றையும் ப்ளாக் அன்ட் ஒயிட்டில் எழுதுவது. எழுதியதை மேலாண்மை செய்வது. ஆ. பாதி வழி அல்ல. முழு வழியும் செல்லல் கோபுரம் கட்டுபவர் பாதியோடு விட்டுவிட்டால் அது அவருக்கு அவப்பெயரையும், மற்றவர்களின் கேலிப்பேச்சையும் கொண்டுவரும். அதுபோல, இருபதாயிரம் பேரை பத்தாயிரம் பேரை எதிர்க்கும் அரசன் பாதியோடு விட்டால் அது அவனுக்கும், அவனோடு இருப்பவர்களுக்கும் மரணமாக முடியும். ஆக, செய்வதை முழுமையாகச் செய்தல் அவசியம். இ. அனைத்தையும் இழக்க வேண்டும் கோபுரம் பாதியில் நிற்க இவர் மீதப் பணத்தை தன்

தீபஒளித் திருநாள்

தீபஒளித் திருநாள் இன்று நாம் தாய்த்திருநாட்டில் தீபஒளித் திருநாளைக் கொண்டாடுகிறோம். தீவாளி, தீபாவளி என்ற சொல்லாடல்கள் மாறி, மாறி இன்று நாம் 'தீப ஒளி' என்று சொல்கின்றோம். 'தீபம்' ('விளக்கு') மற்றும் 'ஆவளி' ('வரிசை') என்ற இரண்டு சொற்களின் கலப்பே தீபாவளி. இன்று, தீபங்கள் வரிசையாக ஏற்றி வைக்கப்படும். மேலும், பட்டாசு, சங்குசக்கரம், வானவெடி அனைத்திலும் நாம் தீபங்களின் வரிசையைத்தான் பார்க்கிறோம். இல்லையா? தீபஒளித் திருநாள் கொண்டாட்டத்தில் வழக்கமாக இரண்டு கேள்விகள் எழுப்பப்படும்: அ. கிறிஸ்தவர்கள் தீபஒளி கொண்டாடலாமா? ஆ. தமிழர்கள் தீபஒளி கொண்டாடலாமா? 'கிறிஸ்துவே உலகின் ஒளி' என்று நாம் கிறிஸ்துவை தீபஒளி கலாச்சாரத்திற்குள் நுழைத்துவிடுகிறோம். ஆக, முதல் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. இரண்டாம் கேள்விக்கான பதில் ரொம்பவும் சிரமமானது. ஏனெனில், தீபஒளி திருநாள் என்பது ஆரியர்களின் திருநாள் என்றும், 'அசுரனின் அழிவு' என்று இன்று கொண்டாடப்படுவது திராவிடர்கள் அல்லது தமிழர்களின் அழிவு என்றும், 'கார்த்திகை திருநாளை' 'தீபாவளி' பெயர