Posts

Showing posts from June, 2017

இயற்கை மருத்துவம்

Image
இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர்"நெல்லிக்கனி 2) இதயத்தை வலுப்படுத்த"செம்பருத்திப் பூ 3) மூட்டு வலியை போக்கும்"முடக்கத்தான் கீரை 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்"கற்பூரவல்லி (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும்"அரைக்கீரை 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்"மணத்தக்காளி கீரை 7) உடலை பொன்னிறமாக மாற்றும்"பொன்னாங்கண்ணி கீரை 8) மாரடைப்பு நீங்கும்"மாதுளம் பழம்  9) ரத்தத்தை சுத்தமாகும்"அருகம்புல் 10) கேன்சர் நோயை குணமாக்கும்" சீதா பழம் 11) மூளை வலிமைக்கு ஓர்"பப்பாளி பழம் 12) நீரிழிவு நோயை குணமாக்கும்" முள்ளங்கி 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட"வெந்தயக் கீரை  14) நீரிழிவு நோயை குணமாக்க" வில்வம்  15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்"துளசி 16) மார்பு சளி நீங்கும்"சுண்டைக்காய் 17) சளி, ஆஸ்துமாவுக்கு"ஆடாதொடை  18) ஞாபகசக்தியை கொடுக்கும்"வல்லாரை கீரை 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்"பசலைக்கீரை 20) ரத்த சோகையை நீக்கும்" பீட்ரூட்

குடும்பம் என்றால் கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள்.

Image
குடும்பம் என்றால் கொஞ்சம்  அனுசரித்து வாழுங்கள்.             ..... ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...  கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி  அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!! ஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்? "ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்....  நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்.... வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....  இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் ! . பெண் என்றால் அடிமையா என்ன..?  கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ? எனக்கே அசதியா இருக்கு.....  இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.  சும்மா கடுப்பேத்திகிட்டு".... முதியவள் சிறு புன்னகையோடு, "மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!! ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி. எங்க ரெண்டு பேருக்கு

அவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி

Image
1033 - அவசர உதவி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசரக் காலங்களில் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, நான்கு இலக்கம் கொண்ட கட்டணமில்லாத் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகரமயமாக்கல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 1.37 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 4 லட்சம் பேர் காயமடைகின்றனர். இந்தியாவில் தற்போது 90 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகள் மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கும் பெரும்பாலான சுங்கச் சாவடிகள் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் சில சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. சாலை விபத்து நேரிடும் காலங்களில், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை மீட்பதற்கான அவசரகால தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், தேசிய நெடுஞ்சா

அவசர உதவிக்கு... 24 மணி நேரமும்...

Image
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை - 101 விபத்து - போக்குவரத்து விதிமீறல் - 100 / 103 ஆம்புலன்ஸ் - 102 / 108 / 1066 பெண்களுக்கான அவசர உதவி - 1091 குழந்தைகளுக்கான அவசர உதவி - 1098 அவசர காலம் மற்றும் விபத்து - 1099 மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி - 1253 தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி

உறுதிமொழி முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் -

Image
உறுதிமொழி முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம் -

கவுண்டரில்ப பெற்றுக்கொண்ட யண சீட்டை IRCTC என்ற இணையதளத்தில் ரத்து செய்து கொள்ளலாம்

Image
Train பயண சீட்டை கவுண்டரில் பெற்றுக்கொண்டு பயணம் செய்யவில்லை என்றால் அதை IRCTC என்ற இணையதளத்தில் ரத்து செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது ரயில்வே நிர்வாகம் .இதன் மூலம் பயண சீட்டை கவுண்டர் செல்ல தேவையில்லை . https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf

புற்று நோய்க்கு மருந்தாகும் சோற்று நீர்! மிரள வைக்கும் தமிழனின் மூன்று வரி பாடல்

Image
புற்று நோய்க்கு மருந்தாகும் சோற்று நீர்! மிரள வைக்கும் தமிழனின் மூன்று வரி பாடல்

மத்தி மீனில் உள்ள சத்துக்கள்

Image
சிக்கன், மட்டன் உணவுகளை விட மீன் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் உள்ள சத்துக்கள் புரதச்சத்து - 20.9 கிராம் கொழுப்பு சத்து - 10.5 கிராம் சாம்பல் சத்து - 1.9 கிராம் நீர்ச்சத்து - 66.70 கிராம்

கிட்னி நோய்கள் மற்றும் அறிகுறிகள், தங்கள் தடுப்பு மற்றும் ஆரம்ப சிகிச்சை

Image
எந்த நோயையும் ஆரம்ப நிலையில் கண்டறிதல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் சிறுநீரக தொடர்பான சிக்கல்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகிறது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பற்றி தொடர்பு கொள்ள : 044- 28273407 / 044-28241635

சிசேரியன் செய்த பெண்களின் கவனத்திற்கு

சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் தங்கள் பழைய உடலமைப்பை பெறுவதற்கு பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள் அடிவயிற்றை குறைக்க க்ரஞ்சஸ் உடற்பயிற்சி செய்யும் போது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிகளவு அழுத்தத்தை சிசேரியனுக்கு பின் கொடுத்தால், அப்பகுதியில் உள்ள இணைப்புத் திசுக்களின் பாதிப்பு அதிகமாகிவிடும். சிசேரியன் பிரசவத்திற்கு பின் மெல்லோட்டம் பயிற்சியை மேற்கொண்டால், அது அடிவயிற்று பகுதியில் அழுத்தத்தை அதிகம் கொடுத்து, சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை மேலும் தீவிரமாக்கும். பளு தூக்கும் பயிற்சியை சிசேரியன் செய்த பின் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால், அது உடலில் அழுத்தத்தை அதிகரித்து, உடல் நிலைமையை மோசமாக்கிவிடும். ஓவர்ஹெட் பிரஸ் எனும் உடற்பயிற்சியின் போது, வயிற்றுப் பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் சிசேரியன் செய்த காயம் சரியாக அதிக தாமதத்தை ஏற்படுத்தும். சிசேரியன் செய்த பின் கால்க

தாய்ப்பாலுக்கு இணை தேங்காய் பால்

தாய்ப்பாலுக்கு இணை            தேங்காய் பால்     பகிர்ந்து கொள்ளுங்கள் மக்கள் அறிந்து கொள்ளட்டும் தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர். உண்மை இதோ, பச்சை தேங்காயின் பயன்கள்:- 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்.... பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....! ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்..., தேங்காய் கொழுப்பாய் மாறும்! 👌தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம்......! 👌சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்........! உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...! இரத்தத்தை சுத்தமாக்கும்!! 👌உடலை உரமாக்கும்......! 👌உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்! தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: - 🚥🚥🚥🚥🚥🚥🚥🚥 நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம்.....! அதுபோல..., தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....! இனி முடிந்த அ

உமீழ் நீர்:உயிர் நீர்! சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான, இயற்கை மருந்து!!

சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?_ _உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!_ _உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!_ _வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!_ _அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!_ _அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!_    _உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!_ _"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!_ _நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வ

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்.

 இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 🌹 7வது இடம் 2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 🌹 23 வது இடம் 3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 🌹 16வது இடம் 4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 🌹 15வது இடம் 5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 🌹 14வது இடம் 6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? 🌹 மதுரை 7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 🌹 2004 8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு? 🌹 72993 9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது? 🌹 சென்னை 10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு? 🌹 1076 கி.மீ 11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது 🌹 1986 12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது? 🌹 கன்னியாக்குமரி (92.14 சதவீதம்) 13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? 🌹 சென்னை (23,23,454) 14 ) தமிழகத்தில் அதிக மக்

ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்..!

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. 1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. 2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது 4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. 5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது. 6. இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும். 7. ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும். 8. சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல

இந்த பழக்கங்கள் தான் குண்டாவதற்கு காரணம்: தெரியுமா?

நீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் குண்டாகிறோமே என நீங்கள் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். அந்த காரணங்களையும் என்னவென்று பார்க்கலாம். மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும். அதனால்தான் அந்த காலத்தில் சொன்னார்கள். நொறுங்கத் தின்னால் நூறு வயது. முடிந்த அளவு ஹோட்டல், கையேந்தி பவன், துரித உணவகம் போன்ற இடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள். அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் மோசமான கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். நேரமில்லை என்று சாக்கு சொல்லாமல், புத்தியை தீட்டி, வீட்டிலேயே நேரத்தை குறைக்கும் எளிய உணவுகளை செய்ய பழகிக் கொள்ளுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்தை இருமடங்காக்கும். இரவு 7 மணி ரெண்டுங்கெட்டான் நேரம். பெரும்பாலோனோருக்கு அந்த சமயத்தில்தான் பசி எடுக்கும். இரவு டின்னரையும் முடிக்க மனதில்லாமல் ஸ்நேக்ஸ் மீது நாட்டம் போகும். ஆனால் அது உடல் பருமனை அதிகப்படுத்த மிக முக்கியமான காரணமாகு

அம்மாடியோவ்: பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

உணவு வகையில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்ட பொருளாகும். பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் பல்வேறு வகையான நோய்கள் குணமாகின்றன. சிறு துண்டு பூண்டை எடுத்து காதில் வைத்து கொண்டால் காது வலி, உடல் வலி, தலைவலி, காய்ச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. கடும் இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பூண்டு, தேன் கலந்து அதை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும். பூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து, கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலையில் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது. பூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிடலாம். படர்தாமரை, கால் அரிப்பு போன்றவற்றுக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் நல்ல மாற்றம் தெரி

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க ஈஸியான வழி

அர்த்தகடி சக்ராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பில் உள்ள கொழுப்பை கரைக்கலாம். எப்படி செய்ய வேண்டும்? முதலில் நின்று கொண்டு உடலை வலது பக்கமாக வளைத்து ஒரு கை வலது முழங்கால் தொடும்படி மற்றொரு கை தலையின் காதை ஒட்டி படத்தில் காட்டியவாறு, இருபுறமும் 1 நிமிடம் செய்ய வேண்டும். பின் கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு மற்றும் நிமிரும் போது உள்மூச்சும் விட வேண்டும். பயன்கள் முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கும். பக்கவாட்டு மார்புத்தசைகளில் ரத்தஓட்டம் அதிகரிக்கும். இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறும். நுரையீரல்களின் கொள்ளளவு அதிகரிக்கும். இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரையும். உடல் மற்றும் பாதத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

நூறு சதவீத தீர்வு: செம்பட்டை நிற முடியை கறுப்பாக மாற்றலாம்

செம்பட்டை நிறமுள்ள முடியை கறுப்பாக மாற்றுவதுடன், முடி உதிர்வை தடுத்து, வழுக்கையில் முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான எண்ணெய் இதோ.. தேவையான பொருட்கள் நெல்லிக்காய் சாறு - 50 மிலி கற்றாழை சாறு - 50 மிலி வெற்றிலை சாறு - 50 மிலி சின்ன வெங்காயச் சாறு - 50 மிலி கருவேப்பிலைச்சாறு - 50 மிலி மருதாணிச் சாறு - 50 மிலி மிளகு - 20 கிராம் செய்முறை முதலில் நெல்லிக்காய், வெற்றிலை போன்றவற்றை தனித்தனியாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் எண்ணெய், மிளகு தவிர மற்ற அனைத்து சாற்றையும் ஒன்றாக கலந்து, அதை அடுப்பில் வைத்து பாதியாக வற்ற வைக்க வேண்டும். பின்னர் அதில் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொதிக்க வைத்து, மிளகை தட்டிப்போட்டு இறக்கி, அந்த எண்ணெய்யை பதப்படுத்தி வைத்து கொண்டு தலையில் தொடர்ந்து தேய்த்து வர வேண்டும். பலன்கள் முடி உதிர்தல் நிற்கும். கண்பார்வை தெளிவாகும். தலைவலி குணமாகும். உடல்சூடு, மூக்கடைப்பு, கப வியாதிகள், இழுப்பு, இருமல் கட்டுப்படும். வழுக்கை தலையிலும் முடி வளரும். 100% செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.