Posts

Showing posts from July, 2018

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்

Image
1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும். 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள் அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள். 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள். ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும். 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள். அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஓர் உண

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

Image
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி! நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும்

Image
முருங்கை 🌿🍃🌱☘முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது. அளவில் சிறிய🌿🌿🌿 குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில்🌳🌲 முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.🌿🍃🌱☘ மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை🚰🚰🚰 சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் 🌲🌳வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான். வருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை🍃🥗🌿 வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது. முருங்கை மரத்தின் இலைகள்🌿, பூக்கள்🌸, காய்கள்🎋 என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின்🍵 சாறு ரத்த அழுத்தத்தை

கர்ப்பிணிகளாயிருந்தால் இந்தத் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் PICME number & RCH ID

Image
PICME number & RCH ID அப்படியென்றால் ... ? இது யாருக்கான தேவை ? இது யாருக்கான  தகவல் ? உங்கள் வீட்டிலோ / வீட்டின் அருகிலோ / நண்பர்களோ / அவர்களின் மனைவியரோ / தெரிந்த தெரியாத யாரும் .கர்ப்பிணிகளாயிருந்தால் இந்தத் தகவல்களைப் பகிர்வதில் பெருமிதமடையுங்கள் ! அவர்கள் அரசு / தனியார் மருத்துவமனைகளில் காண்பிப்பவர்களாயிருந்தாலும் பரவாயில்லை ; எந்த மாதிரியான சமூக பொருளாதார நிலையிலிருந்தாலும் ... #குழந்தைக்கு_பிறப்பு_சான்றிதழ்_பெற (தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தாலும் கூட ) கண்டிப்பாக ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் PICME (தாய் சேய் நல பதிவு எண்)எண்ணும் ஆர்.சி.ஹெச் ஐடியும் தேவை. சமூக பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு அரசு வழங்கி வரும் #டாக்டர்லட்சுமி_ரெட்டி_மகப்பேறு_நிதியுதவித்தொகை ₹ 18000 பெறவும் இந்த பிக்மி எண் நிச்சயமாக அவசியம். சரி .. இதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? * வீட்டினருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி கர்ப்ப விவரங்களைப் பதிவு செய்யலாம். *  102 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம். * உங்கள் வீட்டில் இருந்து கொண்